வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (15:30 IST)

பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரை ’நையப்புடைத்தனர்...’

திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகு பாலியல் தொந்தரவு கொடுத்த  பள்ளி ஆசிரியரை மாணிவியின் உறவினர்கள் மற்றும் ஊர்பொது மக்கள் அடித்ததில் ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமைலை மாவட்டத்தில் உள்ள மேல்நாச்சி ஊரில் உள்ளது அரசு உயர் நிலைப்பள்ளி பலநூறு மாணவ ,மாணவிகள் இங்கு படித்து வருகின்றன்ர்.
 
இந்நிலையில் இந்த ஊரைச்சேர்ந்த ஒரு மாணவுக்கு கண்ணல் என்ற ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதனால் மாணவி தொடர்ந்து  பள்ளிக்கு செல்லுவதை தவிர்த்து வந்திருக்க்கிறார்.
 
இது பற்றி தெரிந்து கொண்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர் கண்ணனை கண்ணு மண்ணு தெரியாமல் அடித்தனர்.
 
இதில் ஆசிரியருக்கு மண்டை உடைந்ததாக தெரிகிறது.
 
எனவே இந்த சம்பவ குறித்து போலீஸார் வழ்க்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.