1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 8 ஜூலை 2015 (14:52 IST)

7 ஆம் வகுப்பு மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்த தந்தை–மகன்

புதுக்கோட்டை அருகே பள்ளியில் படிக்கும் 7 ஆம் வகுப்பு மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து பாலுறவில் ஈடுபட்ட தந்தை–மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
புதுக்கோட்டை, காமராஜபுரத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 7 ஆம் வகுப்பில் 3 தோழிகள் படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் பள்ளி இடைவேளை நேரத்தில் அருகில் உள்ள கடைகளுக்கு தின்பண்டம் வாங்க செல்வது வழக்கம்.
 
வழக்கமாக செல்வது போல், அந்த கடைக்கு சென்ற போது அந்த பகுதியில் உள்ள துரை என்பவர் அந்த மாணவிகளிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
 
அப்போது, தனது வீடு அருகில்தான் உள்ளது என்றும் அங்கு வந்தால் நிறைய திண்பண்டங்கள் தருவதாகவும் கூறி மாணவிகளை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். திண்பண்டத்திற்கு ஆசைப்பட்ட அந்த மாணவிகள் 3 பேரும் துரையின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
 
துரைக்கு வயது 50 அவரது மனைவி இறந்து விட்டார். அவரது மூத்த மகன் பிரகாஷ்க்கு  24 வயது. அவர் கூலி வேலை செய்து வருகிறார். துரையின் 2 ஆவது மகன் ஐடிஐ படித்து வருகிறார்.
 
அப்போது தனது வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டிற்கு வந்த மாணவிகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்த துரை, அந்த மாணவிகளின் உடலில் பல இடங்களில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
முதலில் பயந்த மாணவிகள் அதன் பின்னர் மறுப்பேதும் சொல்லாமல் இருந்துள்ளனர். இதனால் தினமும் மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து துரை பாலுறவில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்நிலையில், துரை பள்ளி மாணவிகளை அழைத்து வந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதை, அவரது மகன் பிரகாஷ் பார்த்துள்ளார். இதன் பின்னர் அவரும் அந்த மாணவிகளிடம் தவறாக நடந்துள்ளார்.
 
இது பல நாட்கள் தொடர்ந்து நடந்துள்ளது. இந்நிலையில், அந்த மாணவிகள் 3 பேரும் விரும்பி அந்த வீட்டிற்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், மாணவிகள் 3 பேரின் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அந்த 3 மாணவிகளும் தங்களுக்குள் ரகசியமாக பேசுவது, பாலியல் தொடர்பாக பேசிக்கொள்வது. மேலும், மற்ற மாணவிகளுடன் சேராமல் தனியாக இருப்பது என்று இருந்துள்ளனர்.
 
இதை பார்த்த சக மாணவிகள் தங்களது ஆசிரியைகளிடம் இது குறித்து கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆசிரியைகள் அந்த 3 மாணவிகளையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.
 
முதலில் அந்த மாணவிகள் எதுவும் கூறாமல் மறைத்துள்ளனர். பின்னர் 3 பேரிடமும் தனித்தனியாக ஆசிரியைகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தினமும் பள்ளிக்கு அருகில் உள்ள வீட்டிற்கு அவர்கள் செல்வதையும், அங்கு தந்தை–மகன் இருவரும் தங்களுக்கு தின்பண்டங்கள் தந்து சில்மிஷத்தில் ஈடுபடுவதையும் கூறியுள்ளனர்.
 
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள், இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தி, பின்னர் மாணவிகளின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து அவர்களிடம் இது குறித்து கூறியுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து,  தந்தை–மகன் இருவரும் சேர்ந்து, தங்கள் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமையைக் கேட்டு பெற்றோர்கள் கடும் வேதனை அடைந்தனர்.
 
அதில் ஒரு மாணவியின் தாய் அமுதவள்ளி என்பவர் இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்தப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து, அந்த மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாணவிகள் கூறியதை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் துரையையும் அவரது மகன் பிரகாசையும் கைது செய்தனர்.