தமிழகத்தில் 74 சதவீதம் வாக்குகள் பதிவு
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பாராளுமன்ற தேர்தல் இன்று 6-வது கட்டமாக தமிழ் நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 117 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக காலை 6.45 மணி முதலே மக்கள் வாக்கு சாவடிகளுக்கு வர தொடங்கி விட்டார்கள்.
7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் பெரும்பாலான ஓட்டு சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டளித்தனர்.
தமிழகம் முழுவதும் 9 மணி நிலவரப்படி 14.31 சதவீத வாக்குபதிவும் 11 மணி நிலவரப்படி 35.28 சதவீத வாக்குப்பதிவும் நடநது இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், மாலை 6 மணியுடன் நடந்து முடிந்த தமிழக அளவிலான வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
இதேபோன்று, சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு 62 % வாக்குகள் பதிவாகியுள்ளன.