1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2016 (15:52 IST)

100 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 வருடம் சிறை

100  ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 வருடம் சிறை தண்டனை அளித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது.
 

 
2006ம் ஆண்டு ஜாதி சான்றிதழ் வழங்க ரூ.100 லஞ்சம் வாங்கியதாக அம்பாசமுத்திரம் துணை தாசில்தார் ஜெயலட்சுமி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.
 
விசாரனை முடிவில், ஜெயலட்சுமி லஞ்சம் வாங்கியது நிரூபணம் ஆனதை அடுத்து அவருக்கு 6 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.