வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (09:23 IST)

கெட்டுப்போன 500 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்: எங்கே தெரியுமா?

மதுரை திருமங்கலத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கெட்டுப்போன 500 கிலோ ஆட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சமீபத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டது. அது நாய்க்கறியாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து விசாரிக்க அதிகாரிகள் ஜோத்பூர் விரைந்துள்ளனர். இதனால் இறைச்சி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. 
 
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் கெட்டுப்போன ஆட்டு இறைச்சி விற்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கிருந்த பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பினாயில் ஊற்றி அதிகாரிகள் மண்ணில் புதைத்தனர். இச்சம்பவம் திருமங்களம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.