வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (00:25 IST)

அரசினர் மகளிர் காப்பகத்திலிருந்து 4 பெண்கள் எஸ்கேப்

சென்னை அரசினர் மகளிர் காப்பகத்திலிருந்து 4 பெண்கள் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை கீழ்ப்பாக்கம் கூர் நோக்கு இல்ல வளாகத்தில் அமைந்துள்ளது மகளிர் காப்பகம். இந்த வளாகத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில், 
ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள், மகளிர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில், அந்த இல்லத்தில் இருந்து 4 பெண்கள் திடீரென தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
 
ஏற்கனவே, அங்கிருந்த சிறுவர்கள் சிலர் தப்பி சென்று பிடிபடாத நிலையில், அதே காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.