வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (12:38 IST)

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயம்

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு அருகே குருவன்மேடு பகுதியில் தனியார் தொழிற்சாலையை சேர்ந்த பேருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 35 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.