வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 21 ஜனவரி 2017 (17:50 IST)

ஜல்லிக்கட்டு மாடுகளை சோதனை செய்ய 20 குழுக்கள் அமைப்பு

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானதை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொள்ளும் மாடுகளை சோதனை செய்ய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


 


 
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை சென்று ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க உள்ளார்.
 
ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகப்பான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாக மதுரை ஆட்சியர் அறிவித்துள்ளார். அதோடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொள்ளும் மாடுகளை சோதனை செய்ய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.