வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2016 (16:00 IST)

அட கொடுமையே! அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து 2 பெண்கள் பலத்த காயம்

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மின்விசிறி கழன்று விழுந்ததில் 2 பெண்கள் பலத்தக் காயமடைந்தனர்.
 

 
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவில் 8 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை சிறப்பு பிரிவில் உள்ள மின்விசிறி ஒன்று எதிர்பாராத விதமாக கழன்று விழுந்தது.
 
இதில் 2 பெண்கள் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரை காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி அளித்தனர். சிறப்பு பிரிவில் பிறந்து சில தினங்களே ஆன குழந்தைகளும் இருந்தன.
 
ஆனால் அதிர்ஷ்டவசமாக மின்விசிறி குழந்தைகள் மீது படாததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.