வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (11:36 IST)

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 11 பேர் விடுதலை

94 குழந்தைகளைக் காவு வாங்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 24 பேரில் முதற்கட்டமாக 11 பேர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட 24 பேரில் பழனிச்சாமி, ஆதவன், தேவி, நாராயணசாமி, முருகன், அந்தோணிசாமி உள்ளிட்ட 11 பேர் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
குற்றம்சாற்றப்பட்ட மீதமுள்ளவர்களுக்கான தீர்ப்பை அரைமணி நேரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.