1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By தபு சங்கர்
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (16:49 IST)

தேவதைகளின் தேவதை

தேவதைகளின் தேவதை. 


 
 
 


எதற்காக 
நீ கஷ்டப்பட்டுக் 
கோலம் போடுகிறாய்.
பேசாமல் 
வாசலிலேயே 
சிறுது நேரம் உட்கார்ந்திரு 
போதும்.
****************
நீ குளித்து முடித்ததும் 
துண்டெடுத்து உன்கூந்தலில்
சுற்றிக் கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான் 
முடி சூட்டிக்கொள்வதா.
***************
தான் வரைந்த ஓவியத்தை 
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப்போல 
நீ ஒவ்வொரு முறையும் 
சரிசெய்கிறாய் 
உன் உடையை.
***************
இலைகள் காய்ந்தால் 
உயிர் உள்ள கொடியும் 
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால் 
உயிரற்ற கொடியும் 
உயிர் பெறுகிறது.
**************
நீ யாருக்கோ செய்த 
மௌன அஞ்சலியைப் 
பார்த்ததும்.....
எனக்கும் 
செத்துவிடத் தோன்றியது