வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By

நவராத்திரி: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு அலங்காரம்

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி ஆரம்பத்தினையொட்டி  விஷ்ணு துர்க்கைக்கு நேற்று சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி  நடைபெற்றது.
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீவிஸ்வகர்மா சித்தி விநாயகர்  ஆலயத்தில், நவராத்திரி விழா தொடக்க நிகழ்ச்சியாக, ஆலயத்தின் பரிவாரதெய்வங்களில் ஒன்றான  அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை சுவாமிக்கு, துர்க்கை அலங்காரங்கள் செய்யப்பட்டதோடு, விஷேச  அலங்காரங்களுடன் சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனையை தொடர்ந்து  பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் அருள் பெற்றனர்.