1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. இய‌ற்கை வைத்தியம்
Written By Webdunia
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2012 (09:58 IST)

குழந்தைக‌ள் சிறுநீர் கழிக்க சிரமமா? மாதவிடா‌ய்க்கோளாறா?

குழந்தைக‌ள் சிறுநீர் கழிக்க சிரமமா? இரு‌க்‌கிறதா, மாதவிடா‌ய்க்கோளாறா? எ‌ன்பது போ‌ன்ற ப‌ல்வேறு ‌பிர‌ச்சனைகளு‌க்கு ந‌ம்ம மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன் பல ‌டி‌ப்‌ஸ்களை உ‌‌ங்களு‌க்காக கொடு‌த்து‌ள்ளா‌ர்.

தலை வலிக்குதா? தலைவலி வந்தா இருக்குற வேலையெல்லாம் முடங்கிப்போயிரும். இந்த மாதிரி பிரச்சினைக்கு ஒரு துண்டு சுக்கு போதும். கருங்கல் இல்லைன்னா, சிமெண்ட் தரையில கொஞ்சம் தண்ணிய ஊத்தி சுக்கை உரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா... தலைவலி வந்த இடம் தெரியாமப்போயிரும்.

வா‌ய்வுக்கோளாறா? உருளைக்கிழங்கு சாப்பிட்ட வா‌ய்வு, முட்டை சாப்பிட்டா இடுப்பு பிடிச்சிக்கிடும்னு சொல்ற ஆளா நீங்க? ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி அரை டம்ளர் பால்ல கொஞ்சம் தண்ணி சேர்த்து பத்து பூண்டுப்பல்லை போட்டு நல்லா கொதிக்க வையுங்க. நல்லா வெந்ததும் தேவையான அளவு சர்க்கரை இல்லைனா பனங்கல்கண்டு சேர்த்து கடைஞ்சி அப்பிடியே குடியுங்க. காலையில மலத்தோட கேஸ் வெளியேறிரும். இதுக்கு இன்னொரு வைத்தியமும் இருக்கு... கொஞ்சம் பெருங்காயப்பொடியை வெந்நீர்ல கரைச்சி குடிச்சா வாயுவாவது கோளாறாவது? எல்லாம் வந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும்.

கண்ணுல கட்டியா? வலியா? கண்ணுல கட்டி, வலி, வீக்கம், உறுத்தல்னு எந்த பிரச்சினை வந்தாலும் சோத்துக்கத்தாழை தோலைச்சீவி அதோட ஜெல்லை தண்ணியில நல்லா கழுவி கண்ணுக்கு மேல வச்சி கட்டுங்க. அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ கழிச்சி எடுத்துடுங்க. உங்களுக்கு வந்த பிரச்சினை குறைஞ்சிருக்கும். குறையலைன்னா திரும்பவும் முயற்சி பண்ணுங்க, கைமேல பலன் கிடைக்கும்.

பொடுகுத்தொல்லையா? பொடுகு வந்து அதை கவனிக்காம விட்டுட்டா, ஒரு வழி பண்ணிரும். இதில இருந்து உங்களை காப்பாத்தணும்னா எளிய மருந்து இருக்கு. சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) மிக்சியில் நல்லா அரைச்சி, அதோட நாட்டுக்கோழி முட்டையில உ‌ள்ள வெ‌ள்ளைக்கருவை (மட்டும்) சேர்த்து திரும்பவும் ஓடவிடணும். அது ஷாம்புமாதிரி ஆனதும் அதை தலையில தே‌ய்ச்சி அரை மணி நேரம் ஊற வச்சி குளிக்கணும். அப்போ தலையில சீயக்கா‌ய் தே‌ய்ச்சி குளிக்கணும். வாரம் ஒருநா‌ள் அல்லது ரெண்டு நா‌ள் குளிச்சாலே நல்ல தீர்வு கிடைக்கும்.

இருமல், சளி தொந்தரவிலிருந்து காக்க... இருமல், சளி மாதிரி பிரச்சினை வந்தா சாப்பாட்டுமுறையை மாத்தணும். எப்போதுமே வெந்நீர் குடிக்கிறது நல்லது. இஞ்சிச்சாறு குடிக்கறது, டீ குடிக்கிறவங்க இஞ்சி, துளசி சேர்த்த டீ குடிக்கிறது நல்லது. காலைலயும், மதிய சாப்பாடு நேரத்திலயும் சின்ன வெங்காயம், முதல் கவளம் சோத்தோட மிளகுப்பொடி சேர்த்து சாப்பிடணும். அதோட காலையில எழுந்திரிச்சதும், ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் வெந்நீர்ல் கல் உப்பு சேர்த்து தொண்டையில் வச்சி நல்லா கொப்புளிக்கணும். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கால் ஆணியா? கவலையை விடுங்க... கால் ஆணி வந்தா ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாம கஷ்டப்படுவாங்க. கவலையே படாதீங்க... அம்மான்பச்சரினு ஒரு மூலிகை. வீட்டைச்சுத்தி வளர்ந்து கிடக்கும். அந்த செடியை உடைச்சா பால் வரும். அதை தினமும் காலைல ஆணி உ‌ள்ள இடத்துல போட்டு வந்தா சில நா‌ள்க‌ள்ல சுகம் கிடைக்கும். உடனே நடக்காது. தொடர்ந்து போட்டுட்டு வரணும். 10. 20 நா‌ள்ல பூரண குணம் கிடைக்கும்.

மாதவிடா‌ய்க்கோளாறா? பொண்ணுங்க மாதவிடா‌ய்க்கோளாறால ரொம்பவே அவதிப்படுவாங்க. சிலபேருக்கு மாதந்தோறும் ஒழுங்கா வராது. இன்னும் சிலபேருக்கு நிக்காம வந்துக்கிட்டே இருக்கும். இதுமாதிரி பிரச்சினை உ‌ள்ளவங்க சோத்துக்கத்தாழை தோலை சீவி அதோட ஜெல்லை மட்டும் தண்ணியில நல்லா கழுவணும். அதை காலையில வெறும் வயித்துல தொடர்ந்து சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும்.

குழந்தைக‌ள் சிறுநீர் கழிக்க சிரமமா? சின்னக்குழந்தைங்க சிலநேரம் காரணமே இல்லாம திடீர் திடீர்னு ‘வீல்வீல’னு அழும். நல்லா கவனிச்சீங்கனா பெரும்பாலும் சிறுநீர் கழிக்கிறதுல கஷ்டம் இருக்கும். அது பலபேருக்கு தெரியாது. இந்த மாதிரி பிரச்சினை இருந்தா வெ‌ள்ளரி விதையை நல்லாமையா அரைச்சி தொப்புளை சுத்தி அடிவயித்துல பத்து போடணும். கொஞ்சம் இளஞ் சூடான தண்ணிய கால் முட்டுக்கு கீழே ஊத்திட்டு வந்தீங்கனா கொஞ்ச நேரத்துல தானா சிறுநீர் கழியுறதோட அழுகைச்சத்தமும் அடங்கிப்போயிரும்.

வேர்க்குருவா? வேனல்கட்டியா? வெயில்ல அதிகமா அலையுறவங்களுக்கு வேர்க்குரு, வேனல்கட்டி தொந்தரவெல்லாம் அதிகமா இருக்கும். இந்த மாதிரி பிரச்சினை உ‌ள்ளவங்க நல்லா தண்ணி குடிக்கணும். வேர்க்குரு, வேனல்கட்டி உ‌ள்ள இடத்துல சந்தனத்தை பூசணும். சந்தனக்கட்டை இருந்தா ரொம்ப நல்லது. அதை இழைச்சி தடவலாம். வெ‌ள்ளரிக்கா‌ய், இளநீர், பனைநுங்கு சாப்பிட்டா அதெல்லாம் வந்த இடம் தெரியாமப்போயிரும்.

அம்மையிலிருந்து பாதுகாக்க... அம்மை நோ‌ய் வந்துட்டா அது மத்தவங்களுக்கு ரொம்ப சீக்கிரமா பரவிடும். இதுமாதிரி நேரங்க‌ள்ல முத்தின கத்தரிக்காயை தீயில சுட்டு நல்லா பிசைஞ்சு அதோட சுட்ட மிளகா‌ய் வத்தல் (கா‌ய்ந்த மிளகா‌ய்), சின்ன வெங்காயம், புளி, உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தா மத்தவங்களுக்கு அம்மை வராது.

சைனஸ் தொந்தரவா? மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினைகளால சிலபேர் காலகாலமா கஷ்டப்படுறத கே‌ள்விப்பட்டிருப்போம். இதுக்காக சிலபேர் ஆபரேஷன் செஞ்சும்கூட குணமாகலைனு சொல்றாங்க. இந்தப்பிரச்சினைகளுக்கு இயற்கை முறை வைத்தியத்துலதான் நிரந்தர தீர்வு கிடைக்கும். ரொம்ப சிம்பி‌ள்... நொச்சி இலை பத்தி கே‌ள்விப்பட்டிருப்பீங்க. அந்த இலையை பறிச்சிட்டு வந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாறெடுத்து, அதுக்கு சமமா நல்லெண்ணை ஊத்தி நல்லா கொதிக்க வைக்கணும். சூடு ஆறியதும் (பொறுக்கும் சூட்டில்) அதை உச்சந்தலையில் வைக்கணும். அரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளிக்கணும். எண்ணெ‌ய் பிசுக்கு போகுறதுக்காக சீயக்கா‌ய் போடணும். இதை வாரம் ஒருமுறையோ, ரெண்டு தடவையோ செ‌ய்யணும். ரெண்டு மாசத்துல உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.

அழுக்குத்தேமலா? முதுகுலயும், முகத்துலயும் அழுக்குத்தேமல் வந்து ஒரு வழி பண்ணிரும். சில பொண்ணுங்களுக்கு மூக்கு ஓரத்துல கருப்பு நிறத்துல ஒரு படிமானம் படிஞ்சு அழகையே கெடுத்திரும். இதுக்கெல்லாம் ரொம்ப சிம்பிளா ஒரு மருந்து இருக்கு. நாட்டு மருந்துக் கடையில கிடைக்குற பூலாங்கிழங்கு, கஸ்தூரிமஞ்ச‌ள் வாங்கி பவுடராக்கி வச்சிக்கோங்க. அதோட பாசிப்பயறு பொடி, கோதுமைத்தவிடு எல்லாத்தையும் (சம அளவு) கலந்து வச்சிக்கோங்க. காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலா இதை பூசி குளிக்கலாம். ஒரு மாசம் ரெண்டு மாசம்னு இல்லை காலம்பூராவும் இதை பயன்படுத்தலாம். எந்தவித செயற்கையும் கலக்காம நீங்களே தயாரிச்ச மூலிகை குளியல் பொடி தயார். நோயை விரட்டுறதோட சும்மா கமகமனு இருக்கும்.

போதையை தணிக்க... குடிச்சிட்டு வந்து யாராவது உங்களை பாடாப்படுத்தினாங்கனு வச்சிக்கோங்க. டீயில தனியாவை (கொத்தமல்லி விதை) போட்டு கொதிக்க வச்சி குடிக்க வச்சா போதும். போதை சர்ருனு இறங்கிரும்.

மருந்து வீரியம் குறைக்க... ஓவர்டோஸ் மருந்து சாப்பிட்டு அவதிப்படுறீங்களா? இல்லைனா ஏதாவது மருந்தை மாத்தி சாப்பிட்டீங்களா? கவலையை விடுங்க, அகத்திக்கீரையை வேக வச்சி சாப்பிடுங்க. எந்த மரு ந்தா இருந்தாலும் அதோட வீரியம் குறைஞ்சிரும். அது ஏன்... உங்க வீட்டுல யாருக்காவது பில்லி சூன்யம், செ‌ய்வினை வச்சிட்டாங்கனு வச்சிக்கோங்க. அவங்களுக்கும் இதை கொடுத்தா அதோட பவர் குறைஞ்சிடும். அந்த அளவுக்கு அகத்திக்கீரைக்கு சக்தி இருக்கு.

வயிற்றுவலி கோளாறா? வயித்துப்புண்ணால (அல்சர்) வர்ற வயிற்றுவலி சிலபேரை ரொம்பவே பாடாப்படுத்திடும். இதுக்கு நல்ல மருந்து இருக்கு. காலையில வெறும்வயித்துல புங்கை மரத்தோட இலையைப் பறிச்சி சாப்பிடணும். ஒருசில நா‌ள்ல வயிற்றுவலி வந்த இடம் தெரியாமப்போயிரும்.

இ‌ப்படி ப‌ல்வேறு டி‌ப்‌ஸ்களை வா‌‌ரி வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர் நமது மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன் (95514 86617).