வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சில அற்புத பயன்கள் நிறைந்த மருத்துவ குறிப்புகள்....!

வேர்க்கடலை: வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலை சாப்பிடுவதால் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரிக் அமிலம் ரத்த குழாயை விரிவடையச் செய்கிறது இதனால் ரத்தம் சீராக இருப்பதோடு இரத்த அழுத்தமும்  குறையும்.
பப்பாளி: சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்து. நரம்புகள் பலமாகும். ஆண்மை விருத்தியாகும். ஞாபக சக்தி மேம்படும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். ரத்தக் கொழுப்பைக் குறைக்கும் மற்றும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு சிறந்தது இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் உள்ளது இது  கண்களுக்கு நல்லது.
 
நாவல்பழம்: நீரிழிவுக்கு அருமருந்து வைட்டமின் பி1 பி2 பி6 ஆகிய சத்துக்கள் நிறைந்த பழம். கல்லீரல் கோளாறு நீங்கும். குடல் புண்ணை  அகற்றும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய தினமும் காலையில் மென்று சாப்பிட்டு வந்தால் நாளடைவில் தைராய்டு கோளாறுகளில் இருந்து விடுதலை  பெறலாம்.
 
கேரட்: மாலைக்கண் நோயை தடுக்கும் கேரட்டில் வைட்டமின் ஏ இருக்கிறது அதனால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. குடல் புண்கள் வராமல் தடுக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்பு பற்கள் பலப்படும். தலைமுடி உதிர்வதை தடுக்கும்.
 
முள்ளங்கி: உடலில் உள்ள கழிவுகளை நீக்கும். புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும். காமாலையை குணப்படுத்தும். சிறுநீரகத்தை சரிசெய்யும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
 
பூண்டு: உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும், வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு கேன்சர் செல்கள்  உருவாகாமலும் தடுக்கும்.