1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குறிப்புகள்!!

குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம்
தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது.
 
குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது. 
 
ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி  குறைந்துவிடும்.
குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து வாரத்திற்கு ஒருமுறை குடிக்கவேண்டும். இத்னால பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
 
குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டால் அது வயிற்று உப்பசத்தை ஏற்படுத்திவிடும்.
 
சீமைச் சாமந்தியை கொண்டு டீ செய்து குடித்து வந்தால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம். ஹெர்னியா இருந்தால், ஒரு நாலைக்கு மூன்று முறை மோரை குடித்து வந்தால் நிச்சயம் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம்.