1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாரம் இருமுறை பப்பாளிபழம் சாப்பிட்டு வந்தால் உண்டாகும் நன்மைகள்...!!

பப்பாளி இலை, பப்பாளி காய், பப்பாளி பழம் என அனைத்து பாகங்களும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. கண்களில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்ய பப்பாளி பழம் மிகவும் பயன்படுகிறது.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல் வளர்ச்சியில் நல்ல மாற்றம் உண்டாகும். பப்பாளி எலும்புகளை வலுப்படுத்துகிறது. 
 
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வரம் ஒரு முறை பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்து நல்ல உடல் ஆரோக்கியத்தை  பெற முடியும்.
 
நரம்பு தளர்ச்சி பிரச்னையை போக்க தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு  சீக்கிரத்திலேயே நீங்கும்.
 
பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு  மலட்டுத்தன்மை நீங்கும்.
 
வாரம் இருமுறை பப்பாளி சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும்  ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
 
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். கல்லீரல் வீக்கம் உள்ளவர்கள் பப்பாளி காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
 
பப்பாளிப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.