1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Muthukumar
Last Modified: ஞாயிறு, 30 மார்ச் 2014 (16:37 IST)

நில அபகரிப்பு- அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீச்சு!

காசியாபாத் கவின்நகர் ராம்லீலா மைதானத்தில் இன்று அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது கூட்டத்திலிருந்து செருப்பு ஒன்று அகிலேஷ் நோக்கி பறந்து வந்தது. ஆனால் அது மேடை அருகில் பத்திரிக்கையாளர் பகுதியில் அது விழுந்தது.
 
செருப்பை விட்டெறிந்தவர் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்று தெரிகிறது. போலீசார் அவரைப்ப் பிடித்து விசாரித்ததில் அவர் சட்டவிரோதமாக தனது நிலம் அபகரிக்கப்பட்டதால் செருப்பு வீசினேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இதனால் காசியாபாத் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.