1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2014 (13:59 IST)

நித்யானந்தாவிற்கு மீண்டும் ஆண்மை பரிசோதனை

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவிற்கு நடத்தப்பட்ட ஆண்மை சோதனையில் சரியான முடிவு அறியப்படாத காரணத்தினால் அவருக்கு மீண்டும் ஆண்மை சோதனை  நடத்தப்படுமென தெரிகிறது.
 

நித்யானந்தாவுக்கு பெங்களூரில் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. இச்சோதனையில் சரியான முடிவு அறியப்படாத காரணத்தினால் அவருக்கு மீண்டும் ஆண்மை சோதனை  நடத்தப்படுமென தெரிகிறது.

நித்யானந்தாவின் முன்னாள் சிஷ்யை ஆர்த்தி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை  வழக்கில்  விக்டோரியா மருத்துவமனையில் செப்டம்பர் 8 ஆம் தேதி நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆனால் இந்த ஆண்மை பரிசோதனையில் நித்யானந்தா சரியான ஒத்துழைப்பை அளிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே மீண்டும் அவருக்கு ஆண்மை சோதனை நடத்தப்படுமென தெரிகிறது.