வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (12:22 IST)

தோற்பவர்களுக்கு வளையல்கள் அனுப்புவேன்: மோடி, கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை

பாஜக பிரதமர் வேட்பாளரும், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் மோதிக்கொள்ளும் வாரணாசி தொகுதியில், இவர்களுக்கு எதிராக திருநங்கை ஒருவர் போட்டியிட தயாராகியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்  சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில், ஹாஜி வஷிர் என்னும் திருநங்கை ஒருவர் இவர்கள் இருவருக்கும் எதிராக போட்டியிட்டு வெற்றிபெறும் நம்பிக்கையுடன் உள்ளார்.
 
மக்கள் மத்தியில் கமலா என அறியப்படும் இவர் ஊழல் மற்றும் வறுமையை ஒழிப்பதையே முதல் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே இரு முறை சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட்டுள்ள இவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும், தோல்வியடைந்த பிற கட்சி தலைவர்களுக்கு வளையல்களை அனுப்பிவைக்க போவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.