வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Muthukumar
Last Modified: ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (15:50 IST)

தேவகவுடாவை அவரது மகனை விட நான் நன்றாகப் பார்த்துக் கொள்வேன் - மோடி கேலி

நரேந்திர மோடி பிரதமரானால் தான் கர்நாடகாவை விட்டு வெளியேறுவேன் என்று தேவ கவுடா கூறியதற்கு நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
 
கர்நாடகத்தில் வருகிற 17–ந் தேதி தேர்தல் நடக்கிறது.சிக்பள்ளாபூர் கொத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்  நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் பேசியதாவது:
 
நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளார்.அப்படி அவர் வெளியேறும் போது குஜராத்திற்கு வரும்படி நான் அவரை அழைக்கிறேன் என்று கூறினார். அங்கு அவரது மகன் குமாரசாமியை விடஒரு படி மேலே நான் நன்றாக அவரை பார்த்துக் கொள்வேன் என்று பா.ஜனதா பிரதமர் வேடபாளர் நரேந்திரமோடி கூறினார்.
 
நாளை தமிழ்புத்தாண்டு என்பதால் நடிகர் ரஜினியை சந்தித்து நேரில் வாழ்த்து கூற உள்ளேன் அதனால் தான் அவரை சந்திக்க உள்ளதாக மோடி குறிப்பிட்டார்.