வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2015 (20:29 IST)

’பாஜக அரசாங்கம் ஏழைகளுக்கு எதிரானது’ - நிதின் கட்காரிக்கு சோனியா கடிதம்

உங்கள் அரசாங்கம் ஏழைகளுக்கு எதிரானது என்று மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி  நிதின் கட்காரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
 
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதனை சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி விமர்சனம் செய்தார். இதனைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில், ”நாட்டின் முதுகெலும்பை உடைக்கும் எந்த சட்டத்தையும் காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாது. இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசத்துக்கு எதிரானவர்கள் அல்ல.” என்றார்.
 
மேலும், “உங்கள் அரசாங்கம் முற்றிலும் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கு எதிரானது. நலிவடைந்த மக்களின் வாழ்வாதார உரிமையை பறித்து, தனியார் நிறுவனங்கள் லாபம் அடையும் வகையில் அரசு செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.