வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 2 ஜூலை 2015 (19:52 IST)

வேலை வாங்கித் தருவதாகக் கூறி லாட்ஜில் வைத்து கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லாட்ஜில் வைத்து கற்பழித்துவிட்டு, அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.
 
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 22 வயதான ஒரு பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபர் ஒருவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு விடுதியில் தங்கி இருந்தபோது இளம் பெண்ணை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
 
எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த அந்த பெண் ஜோத்பூர் கிராமத்துக்கு வந்தார். அங்கு ஒரு கும்பல் அந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. அவர்களிடம் இருந்து தப்பி அந்த பெண் அங்குள்ள ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயில் நிலையத்தில் தனியாக தவித்து கொண்டிந்த அந்த பெண்ணை ஒரு கும்பல் மடக்க முயன்றது.
 
அவர்களிடம் சிக்காமல் தப்பிய அந்த பெண் ஒரு ஆட்டோவில் ஏறி அழுத படி சென்று கொண்டு இருந்தார். சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குப் படுத்திக்கொண்டு இருந்த உதவி துணை ஆய்வாளர் ஆட்டோவில் அழுது கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்து ஆட்டோவை நிறுத்தி விசாரித்தார்.
 
அப்போது அந்த பெண்ணின் பரிதாப நிலை தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.