1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (19:14 IST)

யாகூப் மேமனுக்கு நாளை காலை தூக்கு உறுதி

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு நாளை காலை 7 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

 
மகாராஷ்டிரா மாநில கவர்னரிடம் அவர் தாக்கல் செய்த கருணை மனு, தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு ஆகியவை இன்று மாலை தள்ளுபடி செய்யப்பட்டன.
 
இதையடுத்து நாளை காலை 7 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவார் என நாக்பூர் சிறை வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.