பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி
பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 8 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் நடந்த கருத்தரங்கில் கீழமை நீதிமன்றத்தை சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தனது சக ஆண் நீதிபதி ஒருவர் தன்னை விடுதிக்கு வரும்படி அழைத்ததாகவும் மேலும் கிண்டல் செய்து தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் அளித்தார்.
இந்நிலையில், இந்த புகாரை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அந்த குறிப்பிட்ட நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.