வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 10 மே 2016 (12:14 IST)

அரைகுறை ஆடையில் சுற்றியதாக கூறி இளம்பெண்ணை தாக்கிய கும்பல்

அரைகுறை ஆடையுடன், ஆண்களோடு சுற்றுவதாக கூறி, ஒரு இளம்பெண்ணை தாக்கிய கும்பலை மகாராஷ்டிரா மாநில போலீசார் தேடி வருகின்றனர். 


 

 
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் 22 வயது மிக்க ஒரு இளம்பெண், தன்னுடைய தோழி ஒருவரின் திருமண நிகழ்சியில் நடந்த சங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த 1ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தன்னுடைய ஆண் நண்பர்களுடன் காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அவர்களின் காரை வழிமறித்த ஒரு கும்பல் ‘இப்படி அரை குறை ஆடை அணிந்து இந்த நேரத்தில் ஆண்களுடன் சுற்றுகிறாயே என்று கூறி திட்டியுள்ளனர். அதில் ஒருவர் கீழே இறங்கி வந்து அந்த பெண்ணை வெளியே இழுத்து தாக்கியுள்ளார்.
 
அதை தடுத்த, அந்த பெண்ணின் நண்பரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். அங்கிருந்த சென்ற அவர்கள் சிறுதி நேரத்தில் மேலும் நிறைய பேருடன் வந்து அவர்களை மிரட்டியுள்ளனர். மேலும், அவர்களின் வீடு வரை பின்னால் சென்று அவர்களை பயமுறுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது.
 
இதுபற்றி அந்த பெண் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் ஒரு மணிநேரம் கழித்துதான் போலீசார் அங்கு வந்துள்ளனர். மேலும் யார் மீதும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 
 
தன்னை அசிங்கமாக திட்டியவர்கள் மீதும், தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த இளம்பெண் ஒரு வாரம் காவல் நிலையத்திற்கு அலைந்த பின்புதான், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
 
அந்த தாக்குதல் சம்பந்தமாக அமித் முகேத்கர், சுபம் குப்தா என்ற இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்