1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (22:00 IST)

நடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை முதல் தொடக்கம்

நடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
 

 
பரபரப்பான சூழ்நிலையில், நடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெறும். இரு சபைகளிலும் மொத்தம் 22 நாட்கள் நடைபெற உள்ளது.
 
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள், நாட்டில் பெருகி வரும் சகிப்புத்தன்மை, பருப்பு விலை உயர்வு, பெட்ரோல் மீதான சுங்க வரி அதிகரிப்பு, இட ஒதுக்கீட்டு கொள்கை ஆகிய பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் பிரச்சனை கிளப்ப முடிவு எடுத்துள்ளனர்.
 
இதனால், இந்த முறை நாடாளுமன்ற கூட்டம் குளிரையும் தாண்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.