1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 23 நவம்பர் 2016 (15:56 IST)

விமானங்களில் வைபை வசதி: தொலைத்தொடர்பு துறை திட்டம்

இந்தியாவில் விமான பயணத்தின்போது, வைபை வசதி வழங்க தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இனி இந்தியாவிலும் விமான பயணத்தின்போது வைபை பயன்படுத்தலாம். 


 

 
இந்தியாவில் விமான பயணத்தின்போது செப்போன் பயன்படுத்த அனுமதியில்லை. மற்ற நாடுகளின் விமான பயணத்தின்போது வைபை வசதி வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் விதித்து பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
 
வெளிநாட்டு விமானங்கள் இந்திய வான்வழி கட்டுப்பட்டுக்குள் வந்தவுடன் அவற்றிலும் வைபை வசதி துண்டிக்கப்பட்டுவிடும். இந்நிலையில் இந்தியாவிலும் விமானங்களில் வைபை வசதி பயன்பாடுக்கு அனுமதி வழங்கிட தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.
 
அதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதை மத்திய விமான போக்குவரத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.