வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (16:49 IST)

சிகிச்சைக்கு வந்தவரின் மகளை கற்பழித்த மந்திரவாதி

சிகிச்சைக்காக வந்தவரின் 25 வயது மகளை மந்திரவாதி ஆவி விரட்டுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
மஹாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் வசித்துவரும் ஒருவர் நீண்ட நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நகரத்தில் உள்ள பல டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்துப்பார்த்தும் அவரது மூட்டு வலி குணமாகவில்லை.
 
இறுதியாக அதே பகுதியில் இருக்கும் மந்திரவாதி நவீன் மாலிக்கிடம் சிகிச்சைக்காக சென்று பார்த்துள்ளனர். இதனையடுத்து, மந்திரவாதி நவீன் மாலிக் சிகிச்சைக்காக வந்தவரின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
 
அப்போது அவரது 25 வயது மகளின் மீது மோகம் கொண்டு, அந்த பெண்னை அடைய ஆசைபட்ட மந்திரவாதி நவீன் மாலிக் விரும்பியுள்ளார். இந்நிலையில், கடந்த புதன் கிழமை சிகிச்சைக்காக வீட்டிற்கு சென்று உள்ளார்.
 
அந்த சமயத்தில், அந்த இளம் பெண் மட்டும் தனியாக இருந்து உள்ளார். அப்போது, இளம்பெண்ணின் அறையை சுற்றி தீய சக்திகள் கூறியுள்ளார். அதனால், தான் அந்த தீய சக்திகளை விரட்டப்போவதாக கூறி பவுடரை தூவி உள்ளார். மேலும் சில மந்திரங்களை கூறியுள்ளார்.
 
பின்னர் இளம் பெண்ணின் முகத்திலும் பவுடரை தூவியதை அடுத்து அந்த இளம் பெண் மயக்கம் அடைந்துள்ளார். இந்த சமயத்தில், மந்திரவாதி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
 
தற்போது அவர்கள் மந்திரவாதி நவீன் மாலிக் மீது காட்கோபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால், காவல் துறையினர் நவின் மாலிக்கை கைது செய்து, சட்டப்பிரிவு 376 மற்றும் 328-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.