வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (20:37 IST)

வங்கி திவாலானால் வாடிக்கையாளர்களின் பணம் என்னவாகும்?

பொதுத்துறை, தனியார் என அனைத்து வங்கிகளும் அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளரின் இருப்புத்தொகைக்கு எப்படியும் ஒரு லட்சம் வரை காப்பீடு செய்து வைத்துள்ளன. 
 
இந்நிலையில், வங்கிக்கணக்கில் பலரும் ஒரு லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்துள்ள நிலையில், திடீரென வங்கி திவாலானால், மக்களின் பணம் என்னவாகும் அதர்கான பாதுகாப்பு என்ன என்ற கேள்வியை மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
 
பொதுவாக, ஒரு வங்கி திவாலானால், அந்த வாடிக்கையாளர் எத்தனை லட்சம் இருப்பு வைத்திருந்தாலும், அந்த வாடிக்கையாளருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் மட்டுமே கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதில், வங்கிகளில் ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. மக்களின் பணம் முழுமையாகக் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. 
 
இது தொடர்பாக மத்திய அரசும், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் நிதி நிறுவனமும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.