வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 25 ஜூலை 2014 (12:25 IST)

சிறுமியை பலாத்காரம் செய்த காமக் கொடூரனை அடித்தே கொன்ற கிராம மக்கள்

மேற்குவங்க மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த காமக் கொடூரனை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்.

மேற்குவங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் காளிபசர் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி சிலதினங்களுக்கு முன்னர் காணாமல் போனார்.

இந்நிலையில் அவளது பிணம் ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையின்ர் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது, அதே கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ரத்தன்தாஸ் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.

ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள், 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். ரத்தன்தாசின் வீடு சூறையாடி நொறுக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ரத்தன்தாஸ் பின்னர் இறந்து போனார்.

பலத்த காயம் அடைந்த மற்ற 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.