வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (18:03 IST)

கொசுவை ஒழிக்க கடவுளால் மட்டுமே முடியும்; உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

கொசுவை ஒழிக்க கடவுளால் மட்டும்தான் முடியும், நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.


 

 
நாடு முழுவதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவுக்கு பிறபிக்க வேண்டும் என தானேஷ் லஷ்தன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கூறியதாவது:-
 
நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் கொசு, ஈ உள்ளது. அதனை விரட்டுங்கள் எனக் கூற முடியாது. நீங்கள் கேட்பதை கடவுள்தான் செய்ய முடியும் என்றனர். மேலும் கடவுள் மட்டுமே செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.