1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 18 மே 2015 (21:35 IST)

குற்றச்சாட்டுகளை வைக்கும் முன் புள்ளி விவரங்களை ராகுல் தெரிந்து கொள்ள வேண்டும் - வெங்கையாநாயுடு

பாரதிய ஜனதா மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் முன் புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டு ராகுல் காந்தி பேச வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார். 
 
ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். காங்கிரஸ் பதவியில் இருந்த 10 ஆண்டுகளில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அவர் புள்ளி விவரத்துடன் குறிப்பிட்டார். அப்போதெல்லாம் அது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கவலை தெரிவிக்கவில்லை என்று கூறி அவர் குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் ராகுல் காந்தி புள்ளிவிவரங்களை தெரிந்து வைத்துகொள்ள வேண்டும் என்றார். 
 
காங்கிரஸ் அரசைவிட 4 மடங்கு விலை கொடுத்து தான் நிலங்களை பாஜக அரசு கையகப்படுத்துவதாகவும் வெங்கையாநாயுடு குறிப்பிட்டார். தெலுங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசு குறித்தும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பணம் மேற்கொண்டு வருவதாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.