1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (10:17 IST)

வன்முறையை தூண்டிய கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் கைது!

வன்முறையை தூண்டிய கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் கைது!

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் வன்முறையை தூண்டி விட்டு அதனை அறங்கேற்றியவர்களில் வாட்டாள் நாகராஜ் முக்கியமானவர். அவரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது.


 
 
நேற்று பெங்களூருவில் கடும் கலவரம் மூண்டது. 50-க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 30-க்கும் மேற்பட்ட லாரிகளும் தீ வைக்கப்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.
 
மேலும் பெங்களூரில் பதற்றமான சூழல் நிலவி வந்ததால், மேலும் கலவரம் பெரிதாகமல் இருக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் கன்னட வெறியர்கள் தமிழர்களின் உணவகங்களை தேடி தேடி கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்.
 
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதை தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு விதானசவுதாவை நள்ளிரவில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து கலவரம் மூண்டுவிடக்கூடாது என்பதற்காக வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
 
வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.