வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (13:25 IST)

உபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இட்டா என்ற பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
உத்தரபிரேதசத்தில் கடந்த வாரம் 17 வயது மாணவி ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக போராடிய அந்த மாணவியின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள இட்டா என்ற பகுதியில் 8 வயது சிறுமியை, சோனு என்ற நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான்.
 
சோனு வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை அங்கிருக்கும் புதிய கட்டிடத்திற்கு தூக்கி சென்று கல்லால் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக சோனு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.