வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (19:44 IST)

தீவிரவாதம் குறித்த ஐநா சர்ச்சை அறிக்கை : இந்தியா கடும் கண்டனம்!

சமீபத்தில் காஷ்மீர் குறித்து, ஐநா சபையில்  ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையானது தீவிரவாதத்தை நியாயபடுத்தும் விதமாக உள்ளதென்று கூறி இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
காஷ்மீர் குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காஷ்மீர் மக்களின் சுய மனித  உரிமைகளை இந்தியா மதிக்க வேண்டும்! அதிகமான படைகளை அங்கு ஈடுபடுத்தி இணைய சேவையை முடக்கி வருகிறது என அதில் தெரிவிகப்பட்டிருந்தது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஹ்மீரிலும் இந்தியா அவ்விதம் இருப்பதாகச் குறிப்பிட்டுள்ளது.
 
இதற்கு இந்திய அரசு தனது கண்டனங்களை ஐநாவுக்கு கூறியுள்ளது. தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரித்து வருகின்ற பாகிஸ்தானுக்கு செயற்கையான வழியை உருவாக்கும் முயற்சி என்றும், எல்லை மீறிய தீவிரவாதத்தை கருதாமல் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.