1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (11:44 IST)

டெல்லியில் தொடரும் பயங்கரம் : நண்பர்களின் கண் முன் இரு இளம்பெண்கள் கற்பழிப்பு

டெல்லியில் தொடரும் பயங்கரம் : நண்பர்களின் கண் முன் இரு இளம்பெண்கள் கற்பழிப்பு

நான்கு பேர் கொண்ட கும்பலால் இரு இளம்பெண்கள், நண்பர்கள் கண் முன்னாலேயே கற்பழிக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
2012ம் ஆண்டு நிர்பயா என்ற மாணவி, ஓடும் பேருந்தில் 4 வாலிபர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். அவரின் மரணம் தேசத்தையே உலுக்கியது.
அதன்பின்னும் டெல்லியில் பல இளம்பெண்கள்  மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்தே வருகிறது.
 
இந்நிலையில், டெல்லி அமன் விஹார் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், நேற்று மாலை இரு இளம்பெண்கள், தங்கள் ஆண் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்து அவர்களை மிரட்டியுள்ளது.
 
அதன்பின் அவர்கள், அந்த இரு பெண்களையும் கட்டாயப்படுத்தி, அங்கிருந்து இழுத்து செல்ல முயன்றனர். அதற்கு அவர்களின் ஆண் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களை சராமாரியாக தாக்கிய அந்த கும்பல், அந்த இரு பெண்களையும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்து சென்று, அவர்களின் ஆண் நண்பர்களின் கண் முன்னாலாயே, அவர்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
 
இதையடுத்து அந்த பெண்கள் தங்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பின் போலீசார், அந்த 4 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.