வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2015 (15:45 IST)

பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை: உத்தர பிரதேச நீதிமன்றம் தீர்ப்பு

இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக் கொன்ற இருவருக்கு உத்தரப் பிரதேசம் மாநில முசாபர் நகர் நீதிமன்றம் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர், அங்கு 30 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பசு மாட்டின் தோல் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 
 
இது குறித்து, பசுவதை தடை சட்டத்தின் கீழ், முசாபர் நகர் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரியாஸத், நஸிம் ஆகியோர் மீது வழக்கு நடைபெற்றது. 
 
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ 5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.