1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2014 (10:59 IST)

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் முகர்ஜி சுட்டுக்கொலை

மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் முகர்ஜி அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
இதுகுறித்து பிர்பும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலோக் ராஜோரியா தெரிவித்துள்ளதாவது:- அசோக் முகர்ஜி தன் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு வந்த போது 4 மர்ம நபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் வந்து அவரை சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சுடப்பட்டதும் அசோக் முகர்ஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான அசோக் கோஷ் சுட்டு கொல்லப்பட்டார்.
 
இந்த கொலை வழக்கில் அவரது உறவினர்கள் முக்கிய குற்றவாளியாக அசோக் முகர்ஜி பெயரை காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.