வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : திங்கள், 25 ஜூலை 2016 (11:46 IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 7 குழந்தைகள் பலி ஆகியுள்ளனர்.


 
உத்திரபிரதேச மாநிலம் பாதுஹி பகுதியில் உள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் இருந்த 7 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பல குழந்தைகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.