வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (11:40 IST)

மதக் கலவரங்களை ஏற்படுத்தும் அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்

மதக் கலவரங்களை தூண்டும் முயற்சியில் ஈடுபடும் அமைப்புகளை உடனடியாக தடுக்குமாறும், அவர்கள் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதில் கூறியிருப்பதவது " மத உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்குமாறு மத்திய அரசுகேட்டுக்கொண்டுள்ளது.
 
உத்தரப்பிரதேசத்தில் பசு இறைச்சி வைத்திருந்தா  இஸ்லாமியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து,  தற்பொழுது நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், பல மாநிலங்களில் மதக் கலவரங்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
 
இந்த சூழலில், மதக் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.