வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (12:18 IST)

தானேயில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விபத்து: 11 பேர் பலி

மும்பை தானே நகரில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணா நிவாஸ் என்ற அந்த அடுக்குமாடி கட்டடம் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் இடிந்து விழுந்தது.
கவல் அறிந்த  தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இக்கட்டடம் 50 ஆண்டுகளுக்கு பழமையானது என்பதால் இதில் வசிப்பவர்கள் உடனடியாக  வீட்டை காலி செய்யுங்கள் என தானே  நகராட்சி  நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.