வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (20:23 IST)

மனைவியின் தலையை வெட்டி எடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற கணவன் ! போலீஸ் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஹத்ராஸ் பகுதியில் நடந்த வன்கொடுமை நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் தற்போது ஒரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த யாதவ் என்பவரின் மனைவி விமலா. இந்த தம்பதியருக்கு இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாகத் தெரிகிறது.

தன் மனைவி தன் மீது சண்டை பிடிப்பதற்குக் காரணம் பக்கத்து வீட்டுக்கார என சந்தேகம் கொண்டுள்ளார். ஊரில் வசிப்போர் அவரது மனைவிக்கும் அவருக்கும் தகாத உறவு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த வாரம் வெள்ளியன்று தனது மனைவி பக்கத்து வீட்டில் வசிப்போருடன் பேசிக் கொண்டிருப்பதைப்பார்த்து ள்ளார் யாதவ்.