வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 4 ஜூலை 2015 (05:41 IST)

சந்திரசேகர ராவ் பயணம் செய்ய ரூ 5 கோடி செலவில் சொகுசு பேருந்து வாங்கிய தெலுங்கானா அரசு

தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகராவிற்கு ரூ.5 கோடி செலவில் குண்டு துளைக்காத சொகுசு பேருந்து வாங்கப்பட்டுள்ளது.
 

 
தெலுங்கானா மாநிலத்தில், ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.  

இந்நிலையில், தனது ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்க முதலமைச்சராக சந்திரசேகர ராவ் முடிவு செய்தார். இதனையடுத்து தெலுங்கானா முழுவதும் தனது சாதனைகளை விளக்க  சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்காக, மாநில அரசு சார்பில் ரூ.5 கோடி செலவில், சட்டீஸ்கரில் பென்ஸ் பேருந்து தயார் செய்யப்பட்டு,  தெலுங்கானாவுக்கு கொண்டுவரப்பட்டது.
 
இந்த சொகுசு பேருந்தில் படுக்கையறை மற்றும் ஓய்வறை, 12 பேர் அமர்ந்து உரையாடும் வகையில் அறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், பேருந்தில் இண்டர்நெட், வைபை வசதி உள்ளிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சொகுசு பேருந்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
 
மக்கள் கடும் துயரத்தில் உள்ள போது, இந்த ஆடம்பர சொகுசு பேருந்து தேவையா என எதிர்க் கட்சிகள் இப்போதே சந்திரசேகர ராவ்வை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டன.