வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2016 (18:38 IST)

ஆசிரியரின் செருப்பை தோளில் சுமந்த சிறுவன்

உத்திரபிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு ஷூ அணிந்து வராத காரணத்தினால் சிறுவனை, ஆசிரியர் அவரது செருப்பை தோளில் சுமந்தப்படி பள்ளியை சுற்றி வரச்செய்துள்ளார்.


 

 
உத்திரபிரதேச மாநிலத்தில் ஷாம்லி என்ற நகர் பகுதியில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் படித்து வரும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு ஷூ அணியாமல் சென்றுள்ளான்.
 
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், தனது காலில் அணிந்திருந்த செருப்பை சிறுவனின் தோளில் சுமந்தப்படி பள்ளியை சுற்றி வரச்செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.