வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (20:42 IST)

#MeToo: சிக்கிய டாடா மோட்டர்ஸ் முக்கிய புள்ளிகள்

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை #MeToo என்னும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 
இதில் பல நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால், தற்போது சினிமா, அரசியலை தாண்டி சில தொழில் நிறுவனங்களின் பெரிய தலைகளின் பெயரும் அடிபடுகிறது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்ப்ரேட் கம்யூனிகேஷன் தலைவர் சுரேஷ் ரங்கராஜன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. 
 
சுரேஷ் ரங்கராஜன் மீது இதர்கு முன்னர் வோடபோன், நிஸான் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மீது சக பெண் ஊழியர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால், இவர் மீது டாடா மோட்டர்ஸ் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
இது குறித்து டாடா மோட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, பாலியல் விவகாரங்களை டாடா மோடார்ஸ் நிறுவனம் பொறுத்துக்கொள்ளாது. இவர் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும், அதுவரை அவரை கட்டாய விடுமுறை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.