வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (20:53 IST)

கருப்பு இனத்தவர் குறித்த கருத்து: மன்னிப்பு கேட்டார் தருண்விஜய்

டெல்லியில் உள்ள கிரேடர் நொய்டா என்ற பகுதியில் சமீபத்தில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து அல் ஜசீரா என்ற இணையதளம்  தருண் விஜய்யிடம் பேட்டி எடுத்தது.



 


இந்த பேட்டியில் தருண் விஜய், ''நாங்கள் இனவெறியர்களாக இருந்து இருந்தால், நாங்கள் எப்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற கருப்பு இன தென்னிந்திய மக்களுடன் வாழ முடியும். எங்களைச் சுற்றிலும் கருப்பு இன மக்களை கொண்டு இருக்கிறோம்'' என்று தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பேட்டி தென்னிந்திய மக்களுக்கு கடும் ஆத்திரத்தை கிளப்பியது.

சமூக வலைத்தளங்களில் தருணின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தனது கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த தருண்விஜய், தன்னுடைய பேச்சுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

''நான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை. என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கருப்பு கிருஷ்ணரையும் நாங்கள் வழிபடுகிறோம். பல்வேறு கலாச்சாரம், பண்பாடு கொண்ட மக்களுடன் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணத்தில்தான் கூறி இருந்தேன். நான் கூறியிருக்கிற கருத்து யாரையாவது பாதித்து இருந்தால் மன்னிக்கவும்'' என்று பதிவிட்டுள்ளார். தருண்விஜய் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.