பெருமாள் முருகனுக்கு சமன்வே பாஷா சம்மன் விருது
பெருமாள் முருகனுக்கு சமன்வே பாஷா சம்மன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ என்ற நாவல் ஒரு குறிப்பிட்ட சமுகத்தை இழிவு செய்வதாக கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், எழுத்தாளர் பெருமாள் முருகனை மர் மனிதர்கள் அடித்து உதைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டுத்தி, தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியது.
இந்த நிலையில், அந்த நாவலில் எழுதியதற்காக மன்னிப்பு கேட்டதுடன், இனிநாவல் எழுதப் போவதில்லை என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்தார்.
இந்த நிலையில், பெருமாள் முருகனுக்கு சமன்வே பாஷா சம்மன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ள, இந்திய மொழிகளுக்கான திருவிழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.