செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (15:28 IST)

சாலையில் வெள்ளம் போல் ஓடிய பால் …ஊழியர்கள் அட்டூழியம்

மஹாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா, காங்கிரஸ், தே.,காங்.,ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கால்நடை பராமரிப்பு அமைச்சர்  சுனில் கேதார் சதாபாவ் கோட், ஸ்வபிமானி ஷெட்காரி சங்கதன் மற்றும் மந்திராலயாவில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் இன்று சந்திப்பு நிகழ்த்தி வருகின்றார்.

இந்த நிலையில், , ஸ்வபிமானி ஷெட்காரி சங்கத்னாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பால் நிறுவனத்திற்கு பால் கொண்டு செக்ல்க்லும் டேங்கர் லாரியில் வீதியில் பால் இறைத்துக்கொண்டு செல்வதை எதிர்த்தனர்.

அதேசமயம் மஹாராஷ்டிராவில் பால் லிட்டருக்கு ரூ. 25 நிர்ணயிக்க வேண்டுமெனவும் கூறிவரும் நிலையில், அவர்கள் டேங்கர் லாரியிலிருந்த பல ஆயிரம் லிட்டம் பாலை வீதியில் இறைத்தனர். அந்த சாலை வெள்ளம்போல் சாலையில் மிதக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.