1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (13:06 IST)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
 
மலேசியாவின் வாழும் கலை அமைப்பின் அலுவலகம் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் மலேசியாவில் இந்து மத செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
உடனடியாக இந்திய தூதரம் இது குறித்து மலேசிய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து மலேசிய தூதரகம் இந்த மர்மக்கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதை தொடரந்து ரவிசங்கருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விட்டு ரவிசங்கர் நேற்று மலேசியா வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் தான் அவர் கம்போடியா சென்றார். இந்த மிரட்டல் கடிதத்தில் ஒன்று ஓட்டல் மேனேஜருக்கும் மற்றொன்று வாழுக் கலை அமைப்பின் இயக்குனருக்கும் வந்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக் சென்ற ரவிசங்கர் வன்முறையை கைவிடுமாறு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.