வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 15 பிப்ரவரி 2015 (10:33 IST)

இலங்கை அதிபரின் வருகையால் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு ஏற்படும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிகை

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்திய வருகை அந்நாட்டு தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம்  தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், "இலங்கை தமிழர் பிரச்சனை மற்றும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல. 
 
இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.
 
இலங்கை தமிழர் பிரச்சனை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை அதிபரின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வந்து, பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்துவிட்டு, பல தீர்வுகளை கொடுக்க இருக்கிறார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது.
 
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும்". இவ்வாறு  தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இலங்கை அதிபர் சிறிசேனா 4 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.